Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsஇந்தியாவின் ராஜதந்திரம் - சீனாவுக்கு விழுந்த பலத்த அடி..!

இந்தியாவின் ராஜதந்திரம் – சீனாவுக்கு விழுந்த பலத்த அடி..!

இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாடு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் ஜி-20 உச்சி மாநாடு சீனாவுக்கு பெரும் அடியை கொடுத்துள்ளது. சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் என்னும் BRI திட்டத்தில் இணைந்து இருந்த இத்தாலி இப்பொழுது இந்தியா உருவாக்கும் ஐரோப்பிய எகனாமிக் காரிடாரில் இணையும் பொருட்டு சீனாவின் பெல்ட் & ரோடு திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறது.

வளர்ந்த நாடுகளின் அமைப்பான ஜி-7 அமைப்பில் உள்ள 7 நாடுகளில் இத்தாலி மட்டுமே சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்தில் இணைந்து இருந்தது.


இத்தாலியை வைத்து மற்ற நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளை ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்தில் கொண்டு வர நினைத்து இருந்த சீனாவின் முயற்சியை முறியடிக்க அதே இத்தாலியை சீனா வின்ஒன் ரோடு ஒன் பெல்ட் திட்டத்தில் இருந்து வெளியேற வைத்து சீனாவுக்கு பலத்த அடி கொடுத்துள்ளது இந்தியா.

Recent News