Sunday, May 5, 2024
HomeLatest NewsIndia Newsநாட்டில் புலிகள் அதிகரிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டில் புலிகள் அதிகரிப்பு – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்­தி­யா­வில் அருகி வந்த புலி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்சமயம் 3,167 புலி­கள் இருப்­ப­தாக நேற்றைய தினம் பிர­த­மர் மோடி அவர்கள் அறி­வித்­துள்ளார்.

கர்­நா­டக மாநி­லம் சாம்­ராஜ் நகர் மாவட்­டம் குண்­ட­லு ­பேட்­டை­யில் உள்ள பந்­திப்­பூர் தேசிய புலி­கள் காப்­ப­கம் அமைக்­கப்­பட்டு 50 ஆண்­டு­களை கண்டுள்ள நிலையில், அதற்கு 50 வது ஆண்டு பொன்­விழா நேற்று
நடத்தப்பட்டுள்ளது.

அதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வனப்­ப­கு­தி­யில் ‘சஃபாரி’ உடை­ய­ணிந்து ஜீப்பில் பயணம் செய்துள்ளார்.

பந்­திப்­பூர் காப்­ப­கத்­தில் புலி­கள், யானை­கள் தவிர, கர­டி­கள், இந்­திய மலைப்­பாம்­பு­கள், குள்­ள­ ந­ரி­கள், நான்கு கொம்பு மான்­கள் உள்­ளிட்ட பல உயி­ரி­னங்­களை அவர் பார்­வை­யிட்­டுள்ளார்.

இதை­ய­டுத்து புலி­கள் காப் ப­கத்­தின் 50 வது ஆண்டு பொன் விழா­வில் அவர் பங்­கேற்­றார்.

பொன்­விழா காணும் பந்­திப்­பூர் புலி­கள் காப்­ப­கம் 1973 ஆம் ஆண்­டில் 18,278 சதுர கிலோ மீட்­ட­ரில்
தொடங்­கப்­பட்­டுள்ளது.

முத­லில் ஒன்­பது புலி­கள் இங்கு விடப்பட்ட நிலையில் 75,000 ஆயி­ரம் சதுர கிலோ மீட்­டர் பரப்­ப­ள­வில் 53 புலி­கள் வசிக்கின்றன.

பொன்­வி­ழா­வில் பேசிய பிர­த­மர் மோடி, இந்­தி­யா­வில் புலி­க­ளின் எண்­ணிக்கை 2,967 லிருந்து 3,167ஆக
அதி­க­ரித்­துள்­ளதாகவும், உல­கத்­தில் உள்ள புலி­கள் எண்­ணிக்­கை­யில் 75 விழுக்­காடு இந்­தி­யா­வில் உள்­ளது எனவும் பெருமிதம் அடைந்துள்ளார்.

புரோ­ஜெக்ட் டைகர்’ என்ற திட்­டத்தினை ஆரம்பித்து 50 ஆண்­டு­கள் ஆனமையால் நினைவு நாண­யத்­தை­யும் அவர் வெளி­யிட்­டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News