Saturday, April 27, 2024
HomeLatest Newsஇன்று முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிப்பு

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023  பாதீட்டு முன்மொழிவுக்கமைய, இன்று முதல்அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டு வழங்குவதற்கான சாதாரண சேவைக் கட்டணம் 5,000 ரூபாவாகவும், ஒரு நாள் சேவைக்குரிய கட்டணம் 20,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்கு, சாதாரண சேவைக்கு 3500 ரூபாவும், ஒரு நாள் சேவைக்கு 15,000 ரூபாவும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தினால் கட்டணமாக அறவிடப்பட்டு வந்தது.

Recent News