Saturday, May 4, 2024
HomeLatest Newsகாட்டுத் தீயின் தாக்கம்..!பாதிக்கப்படும் கண்கள்..!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

காட்டுத் தீயின் தாக்கம்..!பாதிக்கப்படும் கண்கள்..!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

காட்டுத் தீ காரணமாக பல்வேறு வகையிலான கண் நோய்கள் ஏற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டுத் தீயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புறச்சூழலில் நடமாடும் போது கண்களில் எரிச்சல் நிலை ஏற்பட்டால் அது தொடர்பாக அதிக செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காட்டுத் தீ காரணமாக வளி மாசடைவதாகவும், அதன் மூலம் கண்களிற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அங்கு, வளி மாசடைவதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கண் அழற்சி நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, கண்களில் இரசாயனப் பதார்த்தங்கள் படுவதனால் பின்க் ஐ எனப்படும் ஓர் கண் அழற்சி நோய் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent News