Friday, May 3, 2024
HomeLatest Newsபெண்கள் முறையாக தூங்காவிட்டால் இந்த பிரச்சினை ஏற்படுமா?

பெண்கள் முறையாக தூங்காவிட்டால் இந்த பிரச்சினை ஏற்படுமா?

பொதுவாக பெண்கள் உரிய நேரத்தில் தூக்கமில்லையென்றால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும்.மேலும் இதற்கு நாம் பயன்படுத்தும் தொலைதொடர்பு சாதனங்கள் தான் முக்கிய காரணமாக அமைகிறது.

இதிலிருந்து வரும் ப்ளூ லைட் காரணமாக மெலடோனின் சுரப்பு தடைப்படும் இதனால் தான் இரவு நேரங்களில் அதிகமானோருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.

இதனை தொடர்ந்து முறையாக தூங்கவில்லையென்றால் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு என பல தாக்கங்கள் ஏற்படும்.இதனால் செய்யவிருக்கும் வேலைகள் அனைத்தும் தடைப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அந்த வகையில் முறையான தூக்கம் இல்லையென்றால் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

முதலில் நாம் தூக்கம் வரவில்லையென புலம்புவதற்கு முன்பு நாம் எந்த நேரத்தில் உறங்க செல்கிறோம் என்பதை பொருத்து தான் இருக்கிறது.நாம் உரிய நேரத்திற்கு செல்லாவிடின் அதிகமான அழுத்தம் எமது மூளைக்கு ஏற்பட்டு, நாம் பிறகு தூங்கும் நிறைவானதாக இருக்காது.

பொதுவாக சிலருக்கு கருத்தரித்தல் பிரச்சினை இருக்கும், இதற்கு தூக்கம் முக்கிய காரணமாக அமைகிறது. முறையாக தூங்காத போது இருள் சூழ்ந்த சமயத்தில் நம் உடலில் சுரக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோன் என்ற ஹார்மோன் சுரப்பது குறைந்து விடும்.

முறையாக தூங்கும் போது கருத்தரித்தல் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஹார்மோன்கள் தன்னுடைய வேலை காட்ட ஆரம்பிக்கும்.

மேலும் தூக்கமில்லையென்றால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். ஏனெனின் உடலில் பெரியளவில் புத்துணர்ச்சி இருக்காது, மேலும் இனப்பெருக்கத்திற்கு தேவையான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் சீரற்ற நிலையை அடையும். இதனால் உறவில் ஈடுபடுவது கடினமாக அமையும்.

Recent News