Friday, March 29, 2024
HomeLatest Newsஉங்களுக்கு அடிக்கடி பண கஷ்டம் ஏற்படுதா?... அப்போ இதுதான் காரணம்

உங்களுக்கு அடிக்கடி பண கஷ்டம் ஏற்படுதா?… அப்போ இதுதான் காரணம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நீங்கள் செய்யும் இந்த 5 தவறுகளால், நீங்கள் அடிக்கடி நிதி பிரச்சனைகளை சந்திப்பதாக கூறப்படுகிறது. அந்த தவறுகள் என்ன என்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் நிறைய புகழையும் பணத்தையும் சம்பாதிக்க விரும்புகிறார்கள். இந்த ஆசையை நிறைவேற்ற மக்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். அப்போ தான், நம் மற்றும் நமது அன்புக்குரியவர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்ற முடியும்.

கடின உழைப்புடன், நமது முன்னேற்றம் வீட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாக வாஸ்து சாஸ்திரத்திம் கூறுகிறது. மன அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சிக்கு வீட்டில் நேர்மறை ஆற்றல் இருப்பது அவசியம். எனவே, வாஸ்து படி நாம் செய்யும் எந்தெந்த தவறுகள் உங்கள் நிதி நிலையை பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

​துடைப்பம் குறித்த இந்த விதிகளை பின்பற்றவும்

இந்து மதத்தின் படி, விளக்குமாறுக்கு லட்சுமி தேவியின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. வாஸ்துவில் கூட, துடைப்பம் பொருளாதாரம் மற்றும் செழிப்புக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வாஸ்துப்படி, துடைப்பத்தை எப்போதும் வீட்டில் யாராலும் பார்க்க முடியாத இடத்தில் வைக்க வேண்டும். மேலும், துடைப்பத்தை செங்குத்தாக நிற்க வைக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விளக்குமாறு தொடர்பான விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஒருபோதும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள மாட்டீர்கள்.

புறா கூடு

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீட்டில் புறா கூடு கட்டினால், அது உங்களுக்கு நிதி பிரச்சனைகளை ஏற்படுத்தப்போகிறது என்பதற்கான அடையாளம். எனவே, உங்கள் வீட்டில் புறா கூடு கட்டக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜோதிடத்தின் படி, புறா என்பது நிழல் கிரகமான ராகுவின் சின்னம். எனவே, புறா நமது வீட்டில் கூடு காட்டினாள் நிதி இழப்பை மட்டும் அல்ல, வீட்டில் மகிழ்ச்சியையும் குறைக்கும்.

​ஈரப்பதத்தை வீட்டிற்குள் நுழைய விடாதீர்கள்

வாஸ்து படி வீட்டில் ஏற்படும் ஈரப்பதம் சரியானதாக கருதப்படுவதில்லை. அது, அசுபமாக கருதப்படுகிட்டது. வீட்டில் ஈரப்பதம் இருப்பது லட்சுமி தேவி அங்கு வசிக்க முடியாது என்பதற்கான அறிகுறியாகும். இது நீர் செல்வத்தின் குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், குழாய் அல்லது தண்ணீர் சொட்டு அல்லது ஈரப்பதம் வீட்டில் இருந்தால், நபர் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

​வீட்டில் உள்ள சிலந்தி வலைகளை அகற்றவும்

வீட்டின் தூய்மையை எப்போதும் கவனித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அன்னை லட்சுமி மற்றும் குபேரரின் அருள் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் சிலந்தி வலைகள் மற்றும் குப்பைகள் குவிவது எதிர்மறை ஆற்றலின் ஆதாரமாக கருதப்படுகிறது. அதனால் தான் உங்கள் வீட்டில் எங்கும் வலைகளை நிறுவ அனுமதிக்காமல் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அதனால் தான் இந்த வலைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

​வீட்டில் முள் செடிகளை வளர்க்க வேண்டாம்

Barbed branch of wild blackberry (Rubus fruticosus) in Norrkila, Lysekil Municipality, Sweden.

முள் செடிகளை வீட்டில் ஒருபோதும் நடக்கூடாது. வீட்டில் முள் செடிகளை நடுவதன் மூலம், ஒரு நபர் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் தான் இதுபோன்ற செடிகளை வீட்டுக்குள்ளோ, முற்றத்திலோ நடக்கூடாது.

Recent News