Sunday, May 19, 2024
HomeLatest Newsநாணயப் பரிமாற்ற வசதிக்கான காலவகாசம் மேலும் நீடிக்கபட்டுள்ளது! இந்திய தூதரகம்

நாணயப் பரிமாற்ற வசதிக்கான காலவகாசம் மேலும் நீடிக்கபட்டுள்ளது! இந்திய தூதரகம்

இலங்கைக்கான நாணயப் பரிமாற்ற வசதிக்கான கால எல்லை மேலும் நீடிக்கபட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயப் பரிமாற்ற வசதிக்கான கால எல்லை கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.

இந்த நிலையில், குறித்த நாணயப் பரிமாற்ற வசதிக்கான கால எல்லையை மேலும் நீடிக்க இந்திய மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கான பன்முகப்படுத்தப்பட்டதும், தாராளமானதுமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய மீனவர்களின் சிறிய படகுகளுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Recent News