Friday, May 17, 2024
HomeLatest NewsWorld Newsஎல்லைதாண்டிய பாக்கிஸ்தான் பெண் -இடைநீக்கம் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி..!

எல்லைதாண்டிய பாக்கிஸ்தான் பெண் -இடைநீக்கம் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி..!

பாகிஸ்தான் நாட்டவர் சீமா ஹைதர் தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பேருந்தை சோதனை செய்ததில் கடமை தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை இந்தியா-நேபாள எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு பிரிவு இடைநீக்கம் செய்துள்ளது .


உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த் நகரில் மே 13-ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தனது காதலன் சச்சின் மீனாவுடன் வாழ இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் ஜூலை 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார், ஆனால் ஜூலை 7 ஆம் தேதி சச்சின் மீனாவுடன் பிணையும் வழங்கப்பட்டது.


கிரேட்டர் நொய்டாவில் சீமா ஹைதர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து எஸ்.எஸ். பி ஒரு அடிப்படை விசாரணையைத் தொடங்கியது.

அதன் விளைவாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .
இந்தியா-நேபாள எல்லை திறந்திருப்பதால், விசா இல்லாமல் கடக்கும் தனிநபர்களின் தேசியத்தைக் கண்டறிவது சவாலாகிறது.


குறிப்பாக அண்டை நாடுகளில் ஒத்த உடல் அம்சங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. இதன் விளைவாக அவர்களை அடையாளம் காண்பது சவாலாகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது .

Recent News