Sunday, May 10, 2026
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேலிய பாதுகாப்பு படை , பாலஸ்தீனிய ஆயுதக்குழு இடையே மோதல் - 2 பேர் சுட்டுக்கொலை..!

இஸ்ரேலிய பாதுகாப்பு படை , பாலஸ்தீனிய ஆயுதக்குழு இடையே மோதல் – 2 பேர் சுட்டுக்கொலை..!

பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்கின்ற ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கூறிவருகின்ற நிலையில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவருகின்றது.

இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரையின் ஜெரிகோ அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இருந்த பாலஸ்தீனியர்களில் சிலர் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.


இரு தரப்பிற்கும் இடையே மோதல் நடைபெற்ற நிலையில் இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 வயது சிறுவன் உள்பட இரு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

Recent News