Wednesday, May 1, 2024
HomeLatest NewsWorld Newsசந்திரயான்-3 தென் துருவத்தில் தரையிறங்கவில்லை உறுதியாக கூறும் சீனா..!

சந்திரயான்-3 தென் துருவத்தில் தரையிறங்கவில்லை உறுதியாக கூறும் சீனா..!

இந்தியாவில் இருந்து அனுப்பட்ட சந்திரயான்-3, சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை என்று இந்தியாவிற்கு கிடைத்துள்ள இந்த சாதனையை மறுத்து பேசியுள்ளார் ஒரு சிறந்த சீன விஞ்ஞானி.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது. இதையடுத்து ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்து தற்போது உறக்க நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை எழுப்பும் பணிகளை இஸ்ரோ மீண்டும் செய்து வருகின்றது.

இந்நிலையில் இந்த வரலாற்று சாதனையை மறுத்து பேசும் வகையில் சீனாவின் முதல் சந்திரப் பயணத்தின் தலைமை விஞ்ஞானியாக இருந்த சீன அண்டவியல் விஞ்ஞானி ஓயாங் ஜியுவான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

விண்கலமானது தென் துருவத்திலோ அல்லது அதற்கு அருகிலோ தரையிறங்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

“சந்திரயான்-3 தரையிறங்கும் தளம் நிலவின் தென் துருவத்தில் இல்லை, நிலவின் தென் துருவத்தின் துருவப் பகுதியில் இல்லை,” என சீன அறிவியல் அகாடமியின் உறுப்பினரான ஓயாங் தெரிவித்துள்ளார்.

பூமியில், தென் துருவமானது 66.5 மற்றும் 90 டிகிரி தெற்கே வரையறுக்கப்படுகிறது, ஏனெனில் அதன் சுழற்சி அச்சு சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது.

சந்திரனின் சாய்வு 1.5 டிகிரி மட்டுமே என்பதால், துருவப் பகுதி மிகவும் சிறியதாக இருக்கும் என்று கூறுகின்றார்.

மேலும் நாசா சந்திரனின் தென் துருவத்தை 80 முதல் 90 டிகிரியாகக் கருதுகிறது, அதே நேரத்தில் ஓயாங் சந்திரனின் 1.5 டிகிரி சாய்வைப் பிரதிபலிக்கும் வகையில் வெறும் 88.5 முதல் 90 டிகிரி வரை சிறியதாக இருப்பதாக கூறுகின்றார்.

இந்த விடயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News