Monday, February 24, 2025
HomeLatest Newsபேருந்து நிலையத்தில் பேருந்துகளை இனி நிறுத்த முடியாது...!புதிய நடைமுறை இலங்கையில்.!

பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இனி நிறுத்த முடியாது…!புதிய நடைமுறை இலங்கையில்.!

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளுக்கும் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒன்று அளவிலான பேருந்துகளுக்கு ஏற்கனவே ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக நிலான் மிராண்டா மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொருத்தப்படுகின்ற ஜி.பி..எஸ் கருவிகளால், பேருந்துகள் நீண்ட நேரம் பேரூந்து தரிப்பு நிலையங்களில் நிறுத்த முடியாது எனவும் நிலான் மிராண்டா குறிப்பிட்டுள்ளார்.

Recent News