Thursday, May 16, 2024
HomeLatest Newsஇலங்கை தொடர்பில் விவாதிக்கும் பிரித்தானிய நாடாளுமன்றம்!

இலங்கை தொடர்பில் விவாதிக்கும் பிரித்தானிய நாடாளுமன்றம்!

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில்இ அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம்  விவாதம் நடத்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எலியட் கோல்பர்ன், சாரா ஓல்னி, ஸ்டீபன் டிம்ஸ் பிரபு மற்றும் தெரசா வில்லியர்ஸ் ஆகியோர் குறித்த விவாதத்தை முன்வைத்துள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வணிகக் குழு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் கூடி, எந்தவொரு விடயம் மீதும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்கான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

அதன்பின், தன்னிடம் உள்ள வரையறுக்கப்பட்ட நாடாளுமன்ற நேரத்தை குறித்த விவாதத்துக்காக எவ்வாறு ஒதுக்குவது என்பதை அந்தக் குழு முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News