Monday, April 29, 2024
HomeLatest Newsநாட்டில் 24 மணி நேரமும் எரிபொருள் கொண்டு செல்வதற்குத் தயாராகும் பௌசர்கள்

நாட்டில் 24 மணி நேரமும் எரிபொருள் கொண்டு செல்வதற்குத் தயாராகும் பௌசர்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள சிலோன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணிநேரமும் எரிபொருளைக் கொண்டு செல்வதற்கு இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி சாரதிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லப்படும் என சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது 90% முதல் 95% வரை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News