Tuesday, April 30, 2024
HomeLatest Newsகொரோனாவில் இருந்து விடுதலையான பைடன்!

கொரோனாவில் இருந்து விடுதலையான பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு நேற்று முன் தினம் மாலை மற்றும் நேற்று காலையும் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது .

இதைய டுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் . ஜோபைடனை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந் தனர் . இந்த நிலையில் ஜோபை டன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

இதுகுறித்து ஜனா திபதியின் வைத்தியர் கெவின் ஓகானர் கூறும்போது , ” ஜனாதி பதி ஜோபைடனுக்கு நேற்று முன்தினம் மாலை , நேற்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது .

இதையடுத்து ஜனாதிபதி தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார் என தெரிவிக்கப்படுகிறது.

Recent News