Sunday, June 14, 2026
HomeLatest Newsகுரங்கு அம்மை பரிசோதனை தொடர்பில் இலங்கை சுகாதாரத்துறையின் அறிவிப்பு!

குரங்கு அம்மை பரிசோதனை தொடர்பில் இலங்கை சுகாதாரத்துறையின் அறிவிப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையானது குரங்கு அம்மை பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோயை பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனம் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உரிய உபகரணங்களை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Recent News