Thursday, May 2, 2024
HomeLatest Newsஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை பறிகொடுத்த பிரிட்டன் நாட்டவரின் நெகிழ்ச்சிச் செயல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை பறிகொடுத்த பிரிட்டன் நாட்டவரின் நெகிழ்ச்சிச் செயல்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த பிரிட்டன் நாட்டவர் இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார்.

இத்தகவலை பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த டேவிட் லின்சே என்பவரே இவ்வாறு உதவ முன்வந்துள்ளார்.

அமெலி டானியல் லின்சே மன்றத்தை அமைத்துள்ள டேவிட்லின்சே இலங்கையில் உதட்டுபிளவு கிசிச்சைகளை முன்னெடுப்பதற்காக நிபுணர்களுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் டேவிட் லின்சே சுகாதார இராஜாங்க அமைச்சரை சந்திக்கவுள்ளார். அதேசமயம் இலங்கையில் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் போது உயிரிழந்த பிரிட்டனை சேர்ந்த சகோதரர்கள் அமெலி மற்றும் லின்சேயின் நினைவாக அமைப்பொன்றை டேவிட் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News