Wednesday, May 8, 2024
HomeLatest Newsரச்சிதாவின் கையைப் பிடித்துப் பேசிய அமுதவாணன்... வெறித்துப் பார்த்த ரொபேர்ட் மாஸ்டர்..!

ரச்சிதாவின் கையைப் பிடித்துப் பேசிய அமுதவாணன்… வெறித்துப் பார்த்த ரொபேர்ட் மாஸ்டர்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ஆனது ஆரம்பமாகி தற்போது நான்காவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. நாட்கள் எந்தளவுக்கு நீண்டு கொண்டு போகின்றதோ அந்தளவுக்கு போட்டியாளர்களுக்கு இடையிலான சண்டையும், ரொமான்ஸும், காதல் பார்வைகளும் நீண்ட வண்ணம் தான் இருக்கின்றது.

21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 18 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். அதில் அசல்-நிவாஷினி ஜோடிக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஜோடி என்றால் அது ரொபேர்ட் மாஸ்டர்-ரச்சிதா ஜோடி தான்.

இவர்களுக்கு இடையில் நடக்கும் செல்ல சண்டைகள், மற்றும் குறும்புத்தனமான செயல்களை ரசிகர்கள் எப்போதுமே ட்ரோல் செய்து வைரலாக்கி வருவது வழமை. அந்தவகையில் தற்போதும் ஒரு வீடியோவினை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

ஆம் அந்த வீடியோவில் அமுதவாணன் ரச்சிதாவின் கையைப் பிடித்துப் பேசிக் கொண்டிருக்கின்றார். அதனை ரொபேர்ட் மாஸ்டர் வெறித்துப் பார்க்கின்றார்.

அதுமட்டுமல்லாது “கையை கீழ விடுடா” என்ற மைன்ட் வாய்ஸ் உடன் தான் மாஸ்டர் அமுதவாணனைப் பார்க்கிறார் எனக் கூறி நெட்டிசன்கள் பலரும் அவரைக் கலாய்த்து வருகின்றனர்.

Recent News