Tuesday, May 21, 2024
HomeLatest NewsWorld Newsதீவிரவாதிகளுக்கு தங்குமிட வசதி - தட்டி தூக்கிய பாதுகாப்பு படை..!

தீவிரவாதிகளுக்கு தங்குமிட வசதி – தட்டி தூக்கிய பாதுகாப்பு படை..!

சமீபத்தில் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கியதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை புனேவில் ஒரு நபரை கைது செய்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து வெடிக்கும் தூள், மடிக்கணினிகள், ட்ரோன்களின் பாகங்கள் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை பயங்கரவாத எதிர்ப்பு படை மீட்டதாக கூறப்படுகிறது .

மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் நகரைச் சேர்ந்த கிராஃபிக் டிசைனர்களான இரண்டு சந்தேக நபர்கள், ராஜஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் ஈடுபட்டதாக NIA தேடிவந்த நிலையில் அவர்கள் தப்பி சென்று இறுதியில் புனேவில் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு தங்குமிடவசதிகள் மேற்கொண்ட நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் . இந்த நடவடிக்கையின் போது தப்பிக்க முடிந்த மூன்றாவது சந்தேக நபரையும் பயங்கரவாத எதிர்ப்பு படை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News