Monday, May 6, 2024
HomeLatest Newsதமிழர் மரபுரிமையைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நல்லூரில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்...!

தமிழர் மரபுரிமையைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நல்லூரில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்…!

தமிழர் மரபுரிமையைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அண்மைக் காலமாக தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் மரபுரிமை மற்றும் தொல்லியல் அடக்குமுறைகளைக் கண்டித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் பேராட்டமானது இன்று (16) காலை 9.30 மணிக்கு நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பமாகி மாலை 3.30 மணியளவில் நிறைவுற்றது. இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து சமயம் சார் பிரதிநிதிகள் , கிறிஸ்தவ மதம் சார் பிரதிநிதிகள் , பாராளுமன்ற உறுபபினர்கள் , மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Recent News