Friday, May 22, 2026
HomeLatest Newsபாடசாலை மாணவர்களுக்காக 40 புதிய பஸ்கள் நாளை முதல் சேவையில்!

பாடசாலை மாணவர்களுக்காக 40 புதிய பஸ்கள் நாளை முதல் சேவையில்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக நாளை (01) முதல் புதிதாக 40 பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சேவையில் உள்ள “சிசு செரிய” பஸ்களுக்கு மேலதிகமாக இந்த பஸ்கள் சேவையில் சேர்க்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இதன்படி, புதிய சேவையின் கீழ், சாதாரண பஸ் கட்டணத்திற்கு உட்பட்டு மாணவர்களை ஏற்றிச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent News