Thursday, May 21, 2026
HomeLatest Newsகொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்;பிரதமராகிறார் சஜித்!

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்;பிரதமராகிறார் சஜித்!

கோட்டபாய ராஜபக்ச கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய நிலையில் இலங்கையின் 8வது நிறைவேற்றதிகாரம் உடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நீதியமைச்சர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் துயரம் மற்றும் பேரழிவைத் தவிர்க்க ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க எதிர்க்கட்சிகளின் உறுதியை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நாடாளுமன்றத்தில் குழு அமைப்பை வலுப்படுத்தவும் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு முன்மொழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த சந்திப்பை அடுத்து பிரதமராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News