Friday, May 22, 2026
HomeLatest Newsசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 64 பேர் திருமலையில் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 64 பேர் திருமலையில் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு முற்பட்ட 64 பேர் திருகோணமலை கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இன்று குறித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட 50 ஆண்கள், உட்பட 11 பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆட்கடத்தலில ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் 7 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Recent News