Friday, May 22, 2026
HomeLatest Newsரஷ்ய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

ரஷ்ய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலினா கஸ்னெல்சன் என்ற 36 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த ரஷ்யப் பெண் கடற்கரைக்கு அருகில் உடற்பயிற்சி செய்யச் சென்ற போது, ​ சந்தேக நபர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் வஸ்கடுவ-பனாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய திருமணமானவராவார்.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recent News