Monday, May 6, 2024
HomeLatest Newsஇந்தியா – இலங்கை இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியா – இலங்கை இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.

இதன்படி,

காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்ட மென்பொருளுடன் கூடிய நவீன கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் பலகைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SL-UDI) திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சுஷ்மா ஸ்வராஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் சர்வீசஸ் (SSIFS), இந்தியா மற்றும் பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் (BIDTI) ஆகியவற்றுக்கு இடையேயான MOI.

கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இலங்கையில் மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அமைச்சர் ஜி. எல் பீரிஸுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கலாநிதி ஜெய்சங்கர், “இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை முடித்தார்” என்று ட்வீட் செய்தார்.

“பொருளாதார மீட்சி, நமது வளர்ச்சி பங்காளித்துவம், பரஸ்பர பாதுகாப்பு, மீனவர்கள் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

Recent News