Friday, May 10, 2024
HomeLatest NewsWorld Newsஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த 42,000 இந்தியர்கள்..!

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த 42,000 இந்தியர்கள்..!

இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவினுள் 42000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக நியூயோர்க்கில் உள்ள தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


குறித்த தகவலின் படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தெரியவருகின்றது.இவர்களில் பெரும்பாலானோர் புகலிடம் தேடியும் வேலைவாய்ப்பிற்காகவும் சட்டவிரோதமாக நுழைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக நுழைவதற்கு வெளிநாட்டு பயண முகவர்களும் போதை பொருள் கடத்துபவர்களும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023 ஒக்டோபர் மாதம் வரையில் சர்வதேச ரீதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக 2 மில்லியன் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News