Tuesday, May 7, 2024
HomeLatest News102 குழந்தைகள் - 12 மனைவியருக்கு கணவன் போட்ட கண்டிப்பான உத்தரவு

102 குழந்தைகள் – 12 மனைவியருக்கு கணவன் போட்ட கண்டிப்பான உத்தரவு

உகாண்டா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது 102 குழந்தைகளை வளர்ப்பது சிரமாக இருப்பதாகவும் எனவே அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

உகாண்டா நாட்டின் புகிசா பகுதியை சேர்ந்தவர் மூசா ஹசாஹ்யா. தற்போது இவருக்கு 67 வயது ஆகிறது. இவர் கடந்த 1971 ஆம் ஆண்டு ஹனிஃபா என்ற பெண்மணியை திருமணம் செய்திருக்கிறார். அப்போது மூசாவுக்கு வயது 16. பள்ளி படிப்பை முடித்தவுடன் மூசாவுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. 2 ஆண்டுகளில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறார்.

12 மனைவிகள்,102 குழந்தைகள்

உகாண்டா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது 102 குழந்தைகளை வளர்ப்பது சிரமாக இருப்பதாகவும் எனவே அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

உகாண்டா நாட்டின் புகிசா பகுதியை சேர்ந்தவர் மூசா ஹசாஹ்யா. தற்போது இவருக்கு 67 வயது ஆகிறது.

இவர் கடந்த 1971 ஆம் ஆண்டு ஹனிஃபா என்ற பெண்மணியை திருமணம் செய்திருக்கிறார். அப்போது மூசாவுக்கு வயது 16. பள்ளி படிப்பை முடித்தவுடன் மூசாவுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. 2 ஆண்டுகளில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறார்.

மேலும், இந்த காலத்தில் அதிக திருமணங்கள் செய்து கொள்வது பெரும் சிரமான காரியம் என்றும் ஆகவே, அதிக திருமணங்களை செய்துகொள்ள வேண்டாம் எனவும் அந்த ஊர் இளைஞர்களை வலியறுத்தி வருகிறார் மூசா.

அந்த கிராமத்தின் நிர்வாக தலைவராக இருக்கும் மூசா, அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டு அதன் பின்னரே முடிவெடுப்பார் என்கிறார் .

அவருடைய முதல் மனைவி ஹனிஃபா. இதுபற்றி அவர் பேசுகையில்,”அவர் அனைத்து விஷயங்களிலும் எங்களுடன் கலந்துரையாடுவார். எல்லா தரப்பினரிடமும் கேட்கும் முன் முடிவெடுக்க அவர் அவசரப்படுவதில்லை. அவர் யாரையும் துன்புறுத்துவதில்லை. அவர் எங்கள் அனைவரையும் சமமாக நடத்துகிறார்” என்றார்.

Recent News