Thursday, May 2, 2024
HomeLatest Newsநாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!

நாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!

நாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் புதிய அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, ஹோமாகம, மஹரகம, பிட்டகோட்டே, கடுவெல மற்றும் கொதடுவ ஆகிய பகுதிகள் டெங்கு நுளம்பு பரவும் அதிக அபாயம் கொண்ட பிரிவுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டம் –  அத்தனகல்ல, பியகம, திவுலப்பிட்டிய, ஜா-எல, களனி உள்ளிட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் கொண்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டம் – பேருவளை மற்றும் களுத்துறை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

மத்திய மாகாணம் – கண்டி மாவட்டத்தில் 03 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் – 03 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணம் – புத்தளம், கற்பிட்டி, வென்னப்புவ மற்றும் மஹவெவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் புதிய அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஊவா மாகாணம் – பதுளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டம் – வரக்காபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Recent News