Friday, May 3, 2024
HomeLatest Newsவிலையேற்றத்திற்காக யாழில் முன்னணியினர்!

விலையேற்றத்திற்காக யாழில் முன்னணியினர்!

பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா? அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய்? தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வார்கள் போன்ற கோசங்கள் எழுப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

Recent News