Saturday, May 30, 2026
HomeLatest NewsWorld Newsஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ! மக்கள் வெளியேற்றம் !!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ! மக்கள் வெளியேற்றம் !!!

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக, எரிமலையைச் சுற்றி வசித்த சுமார் 11,000 மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.1871 இல், வெடித்த எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தியது.இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி பகுதியில் உள்ள ஒரு தீவில் எப்போதும் செயல்படும் ருவுங் எரிமலை உள்ளது.

எரிமலை வெடித்து எரிமலைக்குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தோனேஷியா உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளின் தாயகமான ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில் அமைந்துள்ளது.

Recent News