Thursday, May 2, 2024
HomeLatest Newsசுவிஸில் சாதனை படைத்த ஈழத்து யுவதி..!குவியும் பாராட்டுக்கள்..!

சுவிஸில் சாதனை படைத்த ஈழத்து யுவதி..!குவியும் பாராட்டுக்கள்..!

சுவிட்ஸர்லாந்தில் ஈழத்து பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளமை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்ற யுவதியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

குறித்த யுவதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தனது 16 வயதில் கடந்து சுவிட்ஸர்லாந்திற்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

அதையடுத்து சுமார் ஒரு வருடத்தில் சுவிட்சர்லாந்து மொழியினை கற்று 06 மாத காலம் ஆசிரியர் துறையை தேர்ந்தெடுத்து கல்வி பயின்றுள்ளதுடன், மருத்துவ துறையை தேர்ந்தெடுத்து தனது திறமைகளை வெளிக்காட்டி Basel பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்துள்ளதுடன் இரண்டாம் வருட மருத்துவ கற்கை நெறியிலும் கால் பதித்துள்ளார்.

இந்த அடிப்படையில் குறுகிய காலத்தில் மொழி அறிவில் தேர்ச்சி பெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்று மருத்துவத்துறையில் கால் பதித்துள்ள இந்த யுவதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அத்துடன், குறித்த யுவதியின் தாயார் வனஜா தமிழீழ நிழல் அரசின் மருத்துவப்பிரிவில் இறுதி வரை வைத்தியராக கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News