Friday, May 17, 2024
HomeLatest Newsசெய்தியாளர் சந்திப்பின்போது மயங்கி விழுந்த சீமான்! – திருவொற்றியூரில் பரபரப்பு

செய்தியாளர் சந்திப்பின்போது மயங்கி விழுந்த சீமான்! – திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவெற்றியூரில் அண்ணாமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிப்பதை கண்டித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்க அவர் அங்கு சென்றார்.

பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இதன்போது சீமான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கபட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

Recent News