Sunday, May 19, 2024
HomeLatest Newsமின்தடை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மின்தடை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற மின் விநியோகத் தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் குறித்த மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை விநியோகிப்பதற்காக மின்சார சபைக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுக்குமாறு வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடுமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Recent News