Friday, May 17, 2024
HomeLatest Newsவட கொரியாவின் ஏவுகணை சோதனை...!தென் கொரியாவுக்கு விரைந்த அமெரிக்க நீர்முழ்கி கப்பல்...!

வட கொரியாவின் ஏவுகணை சோதனை…!தென் கொரியாவுக்கு விரைந்த அமெரிக்க நீர்முழ்கி கப்பல்…!

வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து தென் கொரியாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவானது நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தென் கொரியாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியுள்ளது.

அதிலும், வட கொரியா ஏவுகணைச் சோதனை செய்த அடுத்த நாளே, சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறனுடைய அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று எனவும், சுமார் 2,500 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டு ஏவுகனை ஏவலாம் என்றும் கூறப்படுகின்றது.

குறித்த போர்க்கப்பல் அனுப்பட்டதை தொடர்ந்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க மற்றும் தென் கொரிய கடற்படைகள் தமது சிறப்பு செயற்பாட்டுத் திறனை மேம்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென்கிழக்கு துறைமுக நகரமான பூசானை வந்தடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஆயினும், இந்தக் கப்பல் தென்கொரிய கடற்பரப்பில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News