Thursday, May 2, 2024

பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேற்றம்..!கடும் மோதல் போக்கில் இந்தியா மற்றும் சீனா..!

இந்தியாவின் கடைசி பத்திரிக்கையாளரை இந்த மாத இறுதிக்குள் தமது நாட்டை விட்டு வெளியேறுமாறு சீனா உத்தரவிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வான் மோதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளும் தூதரக ரீதியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான சுழலில், இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த மே மாதம் நடைபெற்ற வேளை அதில் சீன வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்றுள்ளார்.

அதன் போது, சீன பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு இந்தியா தற்காலிக விசா வழங்கியுள்ளது. அதன் பின்னர் விசா புதுப்பிக்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் 14 சீன பத்திரிக்கையாளர்கள் இருந்த நிலையில் தற்பொழுது அது 1 ஆக குறைத்துள்ளது.

விசாவை புதுப்பிக்காமல் சீன பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா அனுமதி மறுத்தமைக்கு சீனா பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் 4 இந்திய பத்திரிக்கையாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அது 1 ஆக குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் விசா முடக்கப்பட்டதை தொடர்ந்து 2 இந்திய பத்திரிக்கையாளர்கள் சீனா செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் எஞ்சிய 2 பத்திரிக்கையாளர்களில் ஒருவர் கடந்த வாரம் இந்தியா திரும்பியுள்ளார்.

தற்பொழுது ஒரு பத்திரிக்கையாளர் மட்டுமே சீனாவில் தற்போதுள்ள நிலையில் அவரது விசாவும் புதுப்பிக்கப்படவில்லை. அது மட்டுமன்றி, அவரை பத்திரிக்கையாளரை இந்த மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறும் சீனா உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறாக அந்த பத்திரிக்கையாளர் வெளியேறும் பட்சத்தில் சீனாவில் இந்திய பத்திரிக்கையாளர்கள் யாரும் செயற்படாத நிலை உருவாகும்.

இந்நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இந்தியாவிலுள்ள ஒரே ஒரு சீன பத்திரிக்கையாளரின் விசா புதுப்பிப்பை இந்தியா நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக பத்திரிக்கையாளர்களின் அனுமதி விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடையே மோதல் போக்கு நிலவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos