Thursday, May 2, 2024
HomeLatest NewsIndia Newsஇந்தியாவின் அடுத்த கட்ட நகர்வு..!விண்ணில் பாயும் சந்திரயான் 3 விண்கலம்..!

இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வு..!விண்ணில் பாயும் சந்திரயான் 3 விண்கலம்..!

சந்திரயான் 3 விண்கலம் இன்றைய தினம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

அந்த வகையில், இந்த விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இந்த, விண்கலத்திலுள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டுள்ளது.

லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளிற்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்றைய தினம் தொடங்கியது.

முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, இன்று பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது.

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கபடுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அந்த வகையில், இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 முயற்சி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News