Monday, May 20, 2024
HomeLatest NewsWorld Newsஜி20 தலைமைப் பொறுப்பு பிரேஸிலிடம் ஒப்படைப்பு..!

ஜி20 தலைமைப் பொறுப்பு பிரேஸிலிடம் ஒப்படைப்பு..!

தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், அக்கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பானது பிரேஸிலிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பானது ஆண்டுதோறும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி, அக்கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசியாவிடமிருந்து கடந்த ஆண்டு இந்தியா பெற்றது.


கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூா்வமாக ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்து வருகிறது. கடந்த 10 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 200-க்கும் அதிகமான ஜி20 கூட்டங்களை இந்தியா நடத்தியது.
ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்களுக்கான உச்சி மாநாடு தில்லியில் சனிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

அதையடுத்து, அடுத்தாண்டு ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேஸில் அதிபா் லூலா டாசில்வாவிடம் பிரதமா் நரேந்திர மோடி ஒப்படைத்தாா். வரும் டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேஸில் அதிகாரபூா்வமாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News