Monday, May 20, 2024
HomeLatest Newsசந்திராயன் 3 உடன் தொடர்பை ஏற்படுத்திய சந்திராயன் 2 -அதிர்ச்சியில் இஸ்ரோ....!

சந்திராயன் 3 உடன் தொடர்பை ஏற்படுத்திய சந்திராயன் 2 -அதிர்ச்சியில் இஸ்ரோ….!

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏற்கனவே சந்திரயான் 2-ஐ கடந்த 2019-ல் செலுத்தியிருந்தது. அப்போது லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதியதால் தகவல் தொடர்பு கிடைக்காமல், திட்டம் தோல்வியில் முடிந்தது.இந்த நிலையில்தான் தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா செலுத்தியுள்ளது.

லேண்டர் நாளை மறுதினம் நிலவில் இறங்க இருக்கிறது. இதற்கிடையே சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் லேண்டர் நிலவின் மேற்பகுதியை அடைய, இஸ்ரோவுக்கு கூடுதலா ஒரு வழி கிடைத்துள்ளது.

Recent News