Friday, May 3, 2024
HomeLatest Newsஉலக மரதன் ஓட்டப் போட்டியில் களமிறங்கும் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன்..!

உலக மரதன் ஓட்டப் போட்டியில் களமிறங்கும் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன்..!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்விற்காக உலகப் பிரசித்தமான மரதன் ஓட்டப் போட்டியில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன் ஒருவர் பங்கேற்கவுள்ளார்.

ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பரோவில் மே மாதம் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறும் உலகப் பிரசித்தி பெற்ற போட்டியான எடின்பரோ மரதன் விழாவில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெய்ஷால் விஐயராஜா என்ற சிறுவனே பங்குபற்றவுள்ளார்.

ஈழத்தில் இளைய சமூகம் போதைப்பொருள் பாவனையால் தம்மையும் தேசத்தையும் அழித்துக் கொள்ளக்கூடாது என்றும் உடலின் நலத்திலும் மருத்துவத்திலும் மிகுந்த அக்கறை கொண்ட தலைமுறையாக வாழவும் வளரவும் வேண்டும் என்பதே இவரின் கோரிக்கையாக காணப்படுகின்றது.

கிளி பீப்பிள் தொண்டு நிறுவனத்தினை எடின்பரோ மரதன் விழாக்குழுவானது (Edinburgh Marathon Festival-2023 EMF ) அங்கீகரிக்கப்பட்ட Charity யாக முதன்முதலில் ஒரு தமிழர்களின் அமைப்பினை ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகப்பிரசித்தி பெற்ற மரதன் திருவிழாவில் சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்களும் 400 அமைப்புக்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News